தேவையானவை:
கொத்தமல்லி விதை - இரண்டு தேக்கரண்டி
புளி - ஆரஞ்சுப் பழ அளவு
கடலைப் பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - இரண்டு மேஜைக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
முருங்கைக்காய் - 4
துவரம் பருப்பு - 400 கிராம்
உளுத்தம் பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 10
கடுகு - அரை தேக்கரண்டி
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியைக் கரைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் பொடி, உப்பு இரண்டையும் போட்டு முருங்கைக் காய்களையும் துண்டுத் துண்டாக நறுக்கிப் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
துவரம் பருப்பை தனியாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
மிளகாய் வற்றல், மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கொத்தமல்லி விதை இவற்றை எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து அம்மியில் வைத்து அரைத்துத் தேவையான நீர் சேர்த்து காய் வெந்து கொண்டிருக்கும் பாத்திரத்தில் கொட்ட வேண்டும்.
பிறகு வெந்தயம், மிளகாய், கடுகு மூன்றையும் எண்ணெயில் போட்டு தாளித்து கருவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கி விட வேண்டும்.
கொத்தமல்லி விதை - இரண்டு தேக்கரண்டி
புளி - ஆரஞ்சுப் பழ அளவு
கடலைப் பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - இரண்டு மேஜைக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
முருங்கைக்காய் - 4
துவரம் பருப்பு - 400 கிராம்
உளுத்தம் பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 10
கடுகு - அரை தேக்கரண்டி
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியைக் கரைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் பொடி, உப்பு இரண்டையும் போட்டு முருங்கைக் காய்களையும் துண்டுத் துண்டாக நறுக்கிப் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
துவரம் பருப்பை தனியாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
மிளகாய் வற்றல், மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கொத்தமல்லி விதை இவற்றை எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து அம்மியில் வைத்து அரைத்துத் தேவையான நீர் சேர்த்து காய் வெந்து கொண்டிருக்கும் பாத்திரத்தில் கொட்ட வேண்டும்.
பிறகு வெந்தயம், மிளகாய், கடுகு மூன்றையும் எண்ணெயில் போட்டு தாளித்து கருவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கி விட வேண்டும்.
No comments:
Post a Comment