Friday, March 18, 2011

மருத்துவக் குறிப்புகள்


1.     குழந்தைகளின் காலில் முள் குத்தி இருந்தால் எடுக்கும் போது வலி தெரியாமல் இருக்க முதலில் சிறிது ஐஸில் வைத்து மரத்துப் போகச் செய்துவிட்டு பிறகு எடுக்கவும்.

2.     மாம்பழத்தில் சர்க்கரைச் சத்து அதிகம். எனவே நீரழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

3.     பப்பாளிப் பழத்தைத் தேனில் தொட்டு உண்டால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இதை தாய்ப்பால் கொடுப்பவர்கள் தினமும் உண்ணலாம்.

4.     தொடர்ந்து முட்டைக்கோசை சாப்பிடுபவர்களுக்கு நெஞ்சுவலி வராது. அடிக்கடி ஜலதோஷமும் வராது.

5.     நாய்க்கடிக்கு சுண்டைக்காய் செடி இலையையும் உப்பையும் அரைத்து கடிவாயில் பூசவும்.

6.     நெல்லிக்காயைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிடுவது இளமையோடிருக்க உதவுகிறது.

7.     வாழைத்தண்டு, முள்ளங்கி, வெள்ளரி ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் அதிக உடல் எடை குறைந்து சீரான உடல் எடை வரும்.

8.     வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூச வயிற்றுப் பொருமல் நீங்கும்.

9.     சுக்கு மிளகு இரண்டையும் ஒரு ஸ்பூன் பால் விட்டு அரைத்து பொட்டிலும், மூக்கின் மேலும் நெற்றியிலும், தடவினால் தலை வலி மறைந்து போகும்.

10. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.

11. மஞ்சளை அரைத்து அத்துடன் சிறிது பன்னீரைக் கலந்து பூசிக் கொண்டு குளித்தால் தேவையில்லாத இடங்களில் இருக்கும் ரோமங்கள் உதிர்ந்துவிடும்.

12. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வறுத்து, பனங்கற்கண்டு சேர்த்து காலையிலும் மாலையிலும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் வயிற்றின் சுற்றளவு குறையும்.

13. நெருப்பு அல்லது சுடுநீர் பட்ட இடத்தில பெருங்காயத்தை அரைத்து பூசினால் எரிச்சல் குறையும். கொப்பளமும் ஏற்படாது.

14. குழந்தைகளுக்கு கஞ்சி காய்ச்சும் போது சிறிது சோயா பீன்ஸ் மாவைக் கூட்டிக் கொள்ளுங்கள். இதனால் அதிக அளவு புரதச் சத்து கிடைக்கும்.

15. பல் ஈற்றில் புண் கண்டால் படிகாரத்தையும், கடுக்காயையும் பொடி செய்து நீரில் கரைத்து வாய் கொப்பளித்து வந்தால் புண் ஆறும்.

16. உறங்கச் செல்லுமுன் ஒரு டம்ளர் வெந்நீர், அரை மூடி எலுமிச்சம் பழத்தை விட்டு இரண்டு தேக்கரண்டி தேன் விட்டுக் கலக்கிக் குடித்தால் நல்ல உறக்கம் வரும்.

17. கண்டங்கத்திரி என்ற கத்தரிக்காய் உள்ள விதையுடன் சிறிது மஞ்சள் வைத்து அரைத்து தடவினால் உடலில் ஏற்படும் வீக்கம் குறையும்.

18. செம்பருத்தி பூக்களை காலையில் இரண்டு மூன்று தினசரி உட்கொண்டால் மலச்சிக்கல் விலகும்.

19. முருங்கைப் பிஞ்சு உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். தாதுவை விருத்தி பண்ணும். லேசான சுரம் தணியும். நாவில் ருசி அறியும் உணர்வை உண்டு பண்ணும்.

20. முருங்கை இலைச் சாற்றைப் பிழிந்து சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் நீர்க்கோவை நீங்கும். இதைக் குழந்தைகளும் பெரியவர்களும் உட்கொள்ளலாம்.

21. பூண்டு பற்களை அம்மியில் வைத்து அரைத்து எலுமிச்சம் பழச் சாற்றில் கலந்து தலைக்குத் தேய்த்து ஊறவைத்து குளித்தால் பேன் ஒழியும்.

22. உணவில் அடிக்கடி கொள்ளுப் பயிரை சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.

23. நான்கு நாட்கள் தொடர்ந்து பப்பாளிப் பழத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் பல்வலி, பல்லில் ரத்தம் வடிதல், பல் ஈறுகளில் வரும் நோய் அத்தனையும் குணமாகும்.

24. காலையில் சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆற வைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்பு வலியும், வெள்ளைப்படுதலும் நிற்கும்.

25. சுரைக்காய் மூளை பலம் பெறவும், மனக்கவலையை போக்கவும், சிறுநீர் கோளாறுகள் நீங்கவும், உடலில் உள்ள கெட்ட நீரை போக்கி உடல் இளைக்கவும் செய்யும்.

26. பசி உண்டாக இஞ்சி, சீரகம், மிளகு, திப்பிலி, சதகுப்பை, கிராம்பு ஆகியவைகளை இடித்து துளசி சாறு விட்டு அரைத்து மாத்திரையாக்கி சாப்பிட பசி உண்டாகும். கீரிப்பூச்சியை வெளிப்படுத்தும்.
















சமையல் குறிப்புகள்


1.     ஊத்தப்பத்தின் நடுவில் துவாரம் செய்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டால் மேலும் கரகரப்பாக ருசியாக இருக்கும்.

2.     கூட்டு, குழம்பு ஆகியவற்றுக்கு அரிசிமாவைக் கரைத்து விடுவதற்குப் பதில் பொட்டுக்கடலை மாவைச் சேர்த்து விடலாம். சீக்கிரம் ஊசிப் போகாது.

3.     தனியா, சீரகம், வற்றல், மிளகாய், பொட்டுகடலை, பெருங்காயம் ஆகியவற்றைப் பொடி செய்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு பொரியலில் கடைசியில் தூவி எடுக்க மிகவும் ருசி கொடுக்கும்.

4.     மிளகாய்ப் பொடியுடன் தயிரைக் குழைத்து இட்லி அல்லது தோசைக்குத் தொட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

5.     சப்பாத்தியின் மேல் சர்க்கரை, ஏலம் கலந்த தேங்காய்ப் பாலை ஊற்றி 5 நிமிடம் கழித்துச் சாப்பிடக் கொடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

6.     பூரி மாவுடன் சிறிது தயிர் சேர்த்துப் பிசைந்தால் பூரி மிருதுவாக இருக்கும்.

7.     தோசை வார்க்க நல்லெண்ணையைக் கலந்து ஊற்றினால் கலவை ஒட்டாது. சிறிதளவு எண்ணெய் ஊற்றினாலும் நிறைய ஊற்றிய மாதிரி இருக்கும்.

8.     இட்லிப் பொடி செய்யும் பொழுது சிறிது கறிவேப்பிலையும் போட்டு மிக்ஸியில் அரையுங்கள். ருசியோ அபாரம். உடலுக்கும் நல்லது.

9.     ரவையை டால்டா விட்டுச் சிவக்க வறுத்து காய்ச்சிய பாலில் ஊறவைத்துப் பிறகு சர்க்கரைப் பாகு வைத்துக் கேசரி கிளறினால் அதிக டால்டாவும் செலவில்லை. ருசியும் இரட்டிப்பாகும்.

10. குலோப் ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால் பாகு உறையாமலும் கெட்டுப் போகாமலும் இருப்பதுடன் சுவையும் கூடுதலாகி நன்றாக இருக்கும்.

11. ரவா உப்புமா மிஞ்சி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடைபோல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.

12. லட்டு செய்யும் போது கலவையில் இரண்டு சொட்டு ஏதாவது ஒரு பழ எசென்ஸ் விட்டு கலந்து பிடியுங்கள். சுவை கூடுதலாவதுடன் மணமாகவும் இருக்கும்.

13. பச்சைக் கொத்தமல்லித் தழைத் துவையல் அரைக்கும் பொழுது மிளகாய்க்குப் பதில் மிளகை வறுத்து வைத்து அரைத்து விடுங்கள். மணம் மாறுதலாக இருப்பதுடன் சுவையும் கூடுதலாகும்

14. பொரியல் செய்யும் பொழுது காரப் பொடிக்குப் பதிலாக தேங்காய்ப் பொடி சேர்த்தால் பொரியலின் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

15. தனி ஜவ்வரிசி மட்டும் போட்டு பாயசம் செய்யும் போது 2 ஸ்பூன் வறுத்த கோதுமை மாவையும் பாலில் கரைத்து ஊற்றிச் செய்தால் பாயசம் கெட்டியாக இருப்பதோடு மணமாகவும் இருக்கும்.

16. வெண்டைக்காய் கறி செய்யும் போது சிறிது தயிர் ஊற்றி வதக்கினால் வழவழப்பு நீங்கி மொரமொரப்பாய், சுவையாய் இருக்கும்.

17. உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும் போது அதில் அரைக் கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்.

18. தினமும் சேகரிக்கும் பால் ஆடையை வாரத்தில் ஒரு நாள் இரவில் சிறிது தயிர் ஊற்றி உறைய வைத்து மறுநாள் காலை ஒரு சாதாரண சமையல் கரண்டியினால் சுழற்றிக் கொண்டிருந்தால் ஐந்தே நிமிடங்களில் வெண்ணெய் திரண்டு விடும்.

19. கொழுக்கட்டை மாவு கிளரும் போது நீருடன் ஒரு கரண்டி பால்விட்டுக் கிளறினால் கொழுக்கட்டை விரிந்து போகாமல் இருக்கும்.

20. புதினா அதிகமாகக் கிடைக்கும் காலத்தில் வாங்கி உலர வைத்துக் கொண்டால், மசாலா சேர்த்துத் தயாரிக்கும் உணவில் சேர்த்தால் மணமாக இருக்கும்.

21. சிறிது சர்க்கரை கலந்த நீரில் கீரையை ஊறவைத்து பிறகு சமையல் செய்து சாப்பிட்டால் கீரை தனி ருசி தரும்.

22. முட்டைக்கோசை நறுக்கும் போது அதில் உள்ள தண்டுகளை எறிந்து விடாமல் அவற்றை சாம்பாரில் போட்டு சமைத்துச் சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.

23. குழம்பை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கும் முன் சிறிது வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து போட்டால் குழம்பு மணக்கும்.

24. தேங்காய்த் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்துச் சமைத்தால் சுவையாக இருக்கும்.

25. தேங்காய் பர்பி செய்யும் போது வேர்க்கடலையில் சிவப்புத் தோலை நீக்கி இரண்டாக உடைத்து நெய்யில் பொரித்து போட்டால் நன்றாக இருக்கும்.

26. காலிபிளவர், முட்டைக்கோசு கூட்டு செய்யும் போது அரை ஸ்பூன் இஞ்சிச் சாறு ஊற்றிச் செய்வது நல்லது. ருசியாக இருக்கும்.

27. ரவையை உப்புப் போட்டு பிசறி வைத்து அதனுடன் உளுந்தை அரைத்துப் போட்டு தோசை வார்த்தால் அது நன்றாக இருக்கும்.

28. கொத்தமல்லி சட்னி மீந்து போய்விட்டால், மோரில் சட்னியைப் போட்டுக் கரைத்து விடுங்கள். மசாலா மோர்ப் போலச் சுவையாக இருக்கும்.

29. வறுத்த புழுங்கல் அரிசியை, மாவாக்கி வைத்துக் கொண்டால், கூட்டு கறிகளை இறக்கும்போது லேசாகத் தூவி இறக்கினால் வாசனை கூடுதலாக இருக்கும்.

30. பஜ்ஜிக்கு காரம் அதிகம் விரும்பாதவர்கள், உப்பு ஓமம் அரைத்துவிட்டுச் செய்து பாருங்கள். பிரமாதமாக இருக்கும்.

31. வடாமுடன் சிறிது கறிவேப்பிலையை அரைத்துக் கலந்து செய்தால் வடாம் தனி ருசியுடன் மணமாக இருக்கும்.

32. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.

33. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

34. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

35. உருளைக்கிழங்கு மற்றும் காலிபிளவர் ஆகிய காய்கறிகளை சமைக்கும் போது தண்ணீரில் சில சொட்டு வினிகரை சேர்த்தால் அவற்றின் நிறம் மாறாது.

36. ஊறுகாய் தயாரிக்கும் போது கடுகுக்கு பதில் சிறிதளவு சோம்பை தாளித்துக் கொட்டலாம். சுவையாக இருக்கும்.

37. தேங்காய்ச் சாதம் எலுமிச்சை சாதம் செய்யும் போது கடலைப் பருப்புக்குப் பதில் பொட்டுக்கடலை போடலாம். சத்தும் அதிகம்.

38. பட்டாணி சமைக்கும் போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும்.

39. தோசை சுடும் முன்பு தோசைக் கல்லில் சிறிதளவு உப்பை வைத்துத் துடைத்தால் கல்லில் தோசை ஒட்டாமல் வரும்.

40. பாகற்காயில் இருக்கும் கசப்பைப் போக்க வேண்டுமானால் அதைச் சமைக்கும்போது காயுடன் சிறிதளவு எலுமிச்சம் பழச் சாற்றைச் சேர்த்தால் போதும்.

41. பருப்பு நன்றாக வேக வேண்டுமென்றால் பருப்புடன் சிறிதளவு நெய்யைச் சேர்த்து வேக விட்டால் போதும்.

42. குழம்பு கூட்டு போன்றவை தயார் செய்யும் பொழுது மாங்காய் சீசனில் புளிக்குப் பதிலாக மாங்காய் சேர்க்கலாம்.இது புது மாதிரியான புளிப்புச் சுவையாக இருக்கும்.

43. கீரையை வேகவைக்கும் போது நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வையுங்கள். கீரையின் நிறம் மாறாமல் இருக்கும், சுவையும் அதிகமாகும்.

44. பக்கோடா செய்யும் போது மொரமொரப்பாக இருக்க வேண்டுமானால் மாவைக் கலக்கும் போது சிறிதளவு நெய்யும், உப்பும், தயிரும் போட வேண்டும்.

45. மிக்சர் செய்யும் போது கடைசியில் ஒரு கைப்பிடி சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளுங்கள். சுவையாக இருக்கும்.

46. அடைக்கு அரைக்கும் போது ஒரு கேரட்டை துருவிப் போட்டு அரைத்து அடை வார்த்தால் அடை நல்ல நிறத்துடன் ருசியாக இருக்கும்.

47. அரிசியை மட்டும் ஊறவைத்து, நைசாக அரைத்து வெள்ளைப் பூசணியின் பஞ்சு போன்ற பாகத்தை இந்த மாவுடன் சேர்த்து அரைக்க வேண்டும். மறுநாள் வார்க்க தோசை மிருதுவாக இருக்கும்.

48. மோரோ, தயிரோ இல்லாவிட்டால் புளியை கொஞ்சம் கெட்டியாக கரைத்துக்கொண்டு அதில் உப்பு சேர்த்து மிளகாய்களை ஊறவைத்து காய வைக்கலாம். மோர் மிளகாயை விட ருசியாக இருக்கும்.

49. கருணைக்கிழங்கை வேக வைக்கும் போது கொஞ்சம் புளிய இலைகளையும் சேர்த்துக் கொண்டால் கிழங்கின் அரிக்கும் தன்மையை இது எரித்துவிடும்.

50. பாலை புரை ஊற்றி வைக்கும் போது அதில் கொஞ்சம் அரிசிக் கஞ்சியை கலந்து ஊற்றி வைத்தால் தயிர் பெயர்த்து எடுக்கும்படி கெட்டியாகி விடும்.

51. கறிவேப்பிலை துவையலுக்கு உளுத்தம் பருப்புத் தாளிப்பதற்குப் பதில் நிலக்கடலையை வறுத்துப் போட்டால் துவையல் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

52. கீரை பயத்தம் பருப்பு கூட்டு செய்யும் போது  ஒரு கப் பாலை விட்டால் மணமாக இருக்கும்.

53. வாழைத்தண்டுக் கூட்டு மற்றும் பொரியல் செய்யும் பொழுது அதனுடன் சிறிது முருங்கைக் கீரையையும் சேர்த்துச் செய்தால் சுவையும் மணமும் மிகவும் நன்றாக இருக்கும். உடம்புக்கு மிகவும் நல்லது.

54. பருப்புத் துவையலுக்கு தேங்காய் இல்லை என்றால் இரண்டு பல் பூண்டை உரித்து வைத்து அரைத்தால் துவையல் சுவையாக இருப்பதோடு கமகமவென்றும் மணக்கும்.

55. சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் உங்கள் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

56. காலிபிளவர் சமைக்கும் போது ஒரு துளி பால் சேர்த்தால் பூ போன்ற வெள்ளை கலர் மாறாமல் இருக்கும். பச்சை வாடையும் வராது.


57. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.

58. எண்ணெய் பலகார டப்பாவில், உப்பைத் துணியில் முடிந்து வையுங்கள். காரல் வாடை வராது.

59. சீடை செய்யும் போது அது வெடிக்காமல் இருக்க சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெயில் போடுங்கள்.

60. தேங்காய் துவையலுக்குத் தேவையான சாமான்களைத் தாளிக்கும் போது சிறிது தனியாவையும் சேர்த்து அரைத்தால் துவையல் மிகவும் ருசியாக இருக்கும்.

61. ஒரு கப் துவரம் பருப்பு, அரை கப் கடலைப் பருப்பு, கால் கப் பயற்றம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பருப்புப் பொடி அல்லது பருப்புத் துவையல் செய்தால் புது வித சுவையுடன் இருக்கும்.

62. ஆம்லெட் செய்யும் போது சிறிதளவு வெண்ணெயையும் முட்டையில் கலந்து நன்றாக கலக்கி ஆம்லெட் செய்து பாருங்கள். ருசியாக இருக்கும்.

63. சாதம் செய்யும் போது சிறு துளி எலுமிச்சை சாறு விட்டால் சாதம் பூப்போல இருக்கும்.

64. கீரை மசியல் செய்யும் போது சிறிது சோறு வடித்த கஞ்சியை விட்டு மசித்தால் நன்கு குழைவாக மசியும்.

65. இட்லிக்கு அரிசி ஊறவைக்கும்போது ஒரு பிடி அவல் சேர்த்து அரைத்தால் இட்லி சாஃப்ட்டாக இருக்கும்.

66. பூரி செய்யும் போது பூரி மாவுடன் சிறிது ரவையையும் போட்டு பிசைந்து பூரியினை சுட்டால், பூரி வெகு நேரம் மொறுமொறுவென்று இருக்கும்.

67. இறைச்சி வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

68. கிழங்குகள் சீக்கிரம் வேக வேண்டுமா? பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து வேக வைத்தால் எளிதில் வெந்துவிடும்.

69. சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.

70. முட்டைக்கோசை இஞ்சியுடன் சேர்த்து வதக்கி பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தயிருடன் அரைத்தால் பச்சடி நன்றாக இருக்கும்.

71. பச்சைப் பட்டாணியை ஊறவைத்து, உப்பு மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வடை தட்டினால் கரகரப்பாக நன்றாகவே இருக்கும். கோஸ் அல்லது வெங்காயம் கீரை போட்டு தட்டலாம்.

72. கறிவேப்பிலை துவையலுக்கு உளுத்தம் பருப்புக்கு பதில் வேர்க்கடலையை வறுத்து போட்டால் துவையல் சுவையாக இருக்கும்.

73. தேங்காய் துவையல் அரைக்கும் பொழுது சிறு துண்டு இஞ்சியையும் சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.





















Thursday, March 10, 2011

வீட்டுக் குறிப்புகள்


1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

3. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.

4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.

7. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்ப்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதைத் தடுக்கலாம்.

8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.

9. எப்பொழுதாவது உபயோகிக்கும் "ஷூ"க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.

10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி மணமாக இருக்கும்.

11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.

12. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் சால்ட் கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.

14. பொருட்களை கரையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.

15. வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.

16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

17. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.

18. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.

19. கடையில் எட்டணாவுக்கு மூக்குப் பொடி வாங்கித் தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.

20. குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய முந்திரி, பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.

21. புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

22. வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்க்கை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.

23. வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் பேனை ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே பரவாது.

24. வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.

25. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.

26. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.

27. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

28. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

29. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

30. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங்  பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.
31. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.

32. தேங்காய் மூடியை தண்ணீரில் வைத்தால் அல்லது மூடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

33. நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது பொலிவுடன் இருக்கும்.

34. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.

35. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.

36. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.

37. சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

38. கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்த படி வெட்டலாம்.

39. மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.

40. எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.

41. மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.

42. ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.

43. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த  பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.

44. பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.

45. கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.

46. சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.

47. எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

48. இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைக்க வேண்டும்.

49. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

50. வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.

51. கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.

52. எரிந்து கொண்டிருக்கும் பல்பின் மேல் இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை பரவும்.

53. நைலான் துணியை தைக்கும் போது ஊசி லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில் குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.

54. டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும் வந்துவிடும்.

55. உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.

56. மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.

57. வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

58. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.

59. பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.

60. கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.

61. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.

62. வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.

63. கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.

64. சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.

65. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

66. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.

67. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

68. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.

69. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.

70. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.

71. சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.

72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.

73. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.

74. மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.

75. வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.

76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டைக் கசக்கச் செய்துவிடும்.

77. பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

78. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.

79. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.

80. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.

81. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.

82. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.

83. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.

84. முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.

85. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.

86. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.

87. குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி விட்டால், சாக்ஸ் ஓரத்தில் அதன் சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம் தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும்.

88. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகோலனைத்  தடவிய பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை தூக்கும்.

89. மிக்ஸியில் அரைக்கப் போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால், தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.

90. வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறி இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.

91. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.

92. சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.

93. வீட்டில் மரச் சாமான்களுக்கு உபயோகிக்கும் பெயிண்டை முறத்தில் தடவி காய வைத்தால் நீண்ட நாட்கள் முறம் புதுசு போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.

94. டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப் பசையை உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.

95. செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.

96. துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.

97. கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.

98. கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.

99. குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன சைஸ் கொசுவலை துணியில், embroider கைவண்ணம் காட்டி டி.வி. கவராக பயன்படுத்தலாம்.

100)துணிகளில் ஹேர்-டை பட்டால் அந்த கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.

101)ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.

102)மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.

103)தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.

104)மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா? ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.

105)அரை வாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.

106)புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.

107)ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.

108)சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.

109)கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

110)பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.

111)இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.

112)பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால் திரியாது.

113)காபி பொடியை போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாஷன் கலகலவென்று இறங்கும்.

114)நெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.

115)தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

116)கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.

117)தயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.

118)ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.

119)தேங்காயை சரிபாதியாக உடைக்க, தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

120)கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

121)குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் "பிரஷ்"ஷாக இருக்கும்.

122)உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.

123)குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா? வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.

124)முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

125)சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.

126)மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்து போகாமல் இருக்க பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப் போட்டு ஒரு டப்பாவில் போட்டு மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.

127)உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.

128)தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.

129)கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

130)சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.

131)வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.

132)துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.

133)பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.

134)கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

135)இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.

136)உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா? அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை இலையின் மீது தேயுங்கள். பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.

137)காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.

138)பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்.