Wednesday, February 23, 2011

நெய் சாதம்


தேவையானவை:

அரிசி - ஒரு லிட்டர்
வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 20
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
பாதாம் பருப்பு - 4
பிஸ்தா பருப்பு - 10
கசகசா - இரண்டு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
வெங்காயம் - 10
நெய் - 200 மில்லி
அக்ரோட் - 2
சாரப் பருப்பு - இரண்டு தேக்கரண்டி
ஜாதிக்காய் - ஒன்று
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 10
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாயையும் வெங்காயத்தையும் மல்லித் தழையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பாதாம், பிஸ்தா, சாரப் பருப்பு, ஜாதிக்காய் ஆகிய அனைத்தையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி நெய்யை விட வேண்டும்.

நெய் காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட வேண்டும்.

அவை வதங்கியதும் அரைத்த பொருட்களை போட்டுச் சற்று நேரம் கிண்ட வேண்டும்.

பிறகு அரிசியைப் போட்டு புரட்டித் தேங்காய்ப் பாலும் நீருமாக இரண்டு லிட்டர் ஊற்றி வேக விட வேண்டும்.

பக்குவமாக வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment