ஒரு எலுமிச்சம் பழ அளவு புளி, ஒரு மேஜைக்கரண்டி உப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அரை ஆழாக்கு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை, எட்டு மிளகாய், ஒரு தேக்கரண்டி துவரம் பருப்பு, சிறிது பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை அம்மியில் வைத்து அப்படியே பொடி செய்து கொள்ளலாம் அல்லது சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு ஒரு கரண்டி கடுகு, ஒரு மேஜைக்கரண்டி துவரம் பருப்பு, சிறிது உளுத்தம் பருப்பு, இரண்டு மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். அவை வறுப்பட்டதும் புளியைக் கரைத்து விடவும். புளி தண்ணீர் சுமார் மூன்று ஆழாக்கு இருக்கலாம். அதற்கு மேல் போகக் கூடாது. அதிலேயே அரைத்து வைத்ததையும் போடவும். குழம்பு நன்றாகக் கொதி வந்ததும் சிறிது கறிவேப்பிலை கொத்தமல்லி கிள்ளிப் போடவும். குழம்பு முக்கால் பாகமாக சுண்டியதும் இறக்கி வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை, எட்டு மிளகாய், ஒரு தேக்கரண்டி துவரம் பருப்பு, சிறிது பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை அம்மியில் வைத்து அப்படியே பொடி செய்து கொள்ளலாம் அல்லது சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு ஒரு கரண்டி கடுகு, ஒரு மேஜைக்கரண்டி துவரம் பருப்பு, சிறிது உளுத்தம் பருப்பு, இரண்டு மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். அவை வறுப்பட்டதும் புளியைக் கரைத்து விடவும். புளி தண்ணீர் சுமார் மூன்று ஆழாக்கு இருக்கலாம். அதற்கு மேல் போகக் கூடாது. அதிலேயே அரைத்து வைத்ததையும் போடவும். குழம்பு நன்றாகக் கொதி வந்ததும் சிறிது கறிவேப்பிலை கொத்தமல்லி கிள்ளிப் போடவும். குழம்பு முக்கால் பாகமாக சுண்டியதும் இறக்கி வைக்கவும்.

No comments:
Post a Comment