எலுமிச்சங்காய் அளவு புளி, ஒரு மேஜைக்கரண்டி உப்பு இரண்டையும் அரை ஆழாக்குத் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். ஒரு மேஜைக்கரண்டி துவரம் பருப்பு, ஒரு தேக்கரண்டி தனியா, எட்டு மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து அம்மியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு மேஜைக்கரண்டி கடலைப் பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு மேஜைக்கரண்டி வெந்தயம், இரண்டு மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். அவை வறுபட்டதும் புளியை மூன்று ஆழாக்கு தண்ணீருக்கு அதிகமாகக் கரைத்து விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க வேண்டும். நன்றாகக் கொதித்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி இரண்டையும் சிறிது கிள்ளிப் போட்டு இறக்கவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு மேஜைக்கரண்டி கடலைப் பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு மேஜைக்கரண்டி வெந்தயம், இரண்டு மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். அவை வறுபட்டதும் புளியை மூன்று ஆழாக்கு தண்ணீருக்கு அதிகமாகக் கரைத்து விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க வேண்டும். நன்றாகக் கொதித்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி இரண்டையும் சிறிது கிள்ளிப் போட்டு இறக்கவும்.
No comments:
Post a Comment