Thursday, February 24, 2011

கத்தரிக்காய் வற்றல் குழம்பு

ஒரு பிடி கத்தரிக்காய் வற்றலை 100 மில்லி நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.

எலுமிச்சம் பழ அளவு புளி, ஒரு மேஜைக்கரண்டி உப்பு இரண்டையும் 100 மில்லி தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும்.

ஒரு மேஜைக்கரண்டி கொத்தமல்லி விதை, எட்டு மிளகாய் இரண்டையும் சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி எண்ணெய் விட வேண்டும்.

எண்ணெய் காய்ந்ததும் இரண்டு மேஜைக்கரண்டி கொத்துக் கடலை அல்லது கடலைப் பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி வெந்தயம், இரண்டு மிளகாய், சிறிது பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்க வேண்டும்.

பிறகு புளியைக் கரைத்து விட்டு கரைத்த பொடியையும் சிறிது மஞ்சள் பொடியையும் போட்டுக் கலக்க வேண்டும்.

குழம்பு கொதி வந்ததும் ஊற வைத்த கத்தரிக்காய் வற்றலை நீர் அகற்றிப் போட வேண்டும்.

காய் நன்றாக வெந்ததும் சிறிது கறிவேப்பிலைப் போட்டு இறக்கி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment