Thursday, February 24, 2011

பொன்னாங்கண்ணிக் கீரை சாம்பார்

200 கிராம் பொன்னாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து ஜலத்தில் போட்டு நன்றாக அலம்பி எடுத்துக் கொள்ளவும்.

100 கிராம் துவரம் பருப்பை 300 மில்லி ஜலத்தில் சிறிது மஞ்சள் போட்டு வேக விடவும். பருப்பு முக்கால் பதம் வெந்ததும் ஆய்ந்து வைத்திருக்கும் பொன்னாங்கண்ணிக் கீரையைப் போட்டு வேக வைக்கவும்.

200 மில்லி ஜலத்தில் எலுமிச்சங்காய் அளவு புளி, மூன்று தேக்கரண்டி உப்பு இவற்றைப் போட்டுக் கரைத்து அதில் சாம்பார் பொடி மூன்று தேக்கரண்டி போட்டுக் கரைத்து கீரை நன்றாக வெந்ததும் புளி ஜலத்தைக் கொட்டிக் கிளறிக் கொடுத்து மூடி வைக்கவும்.

பிறகு தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய் வற்றல் 2 கிள்ளிப் போட்டு கால் தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்புப் போட்டு பருப்பு சிவந்ததும், அரிந்த வெங்காயம் நான்கு தேக்கரண்டி போட்டு நன்றாய் வதங்கியப் பின்னர், கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று உருவிப் போட்டு சப்தம் அடங்கியதும் சாம்பாரைத் தாளிதத்தில் கொட்டி மூடி வைக்கவும். இரண்டு கொதி வந்ததும் பெருங்காயம் சிறிது நீரில் கரைத்துக் கொட்டி கிளறி இறக்கிக் கொள்ளவும். 10 மல்லித்தழை கிள்ளிப் போடவும்

No comments:

Post a Comment