பெரிய தக்காளி மூன்று, இதை எட்டு எட்டுத் துண்டுகளாக அரிந்து கொள்ளவும். வெள்ளைப் பூண்டு ஒன்று இதைத் தோல் போக்கி, பருப்புகளை எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் அளவு பெருங்காயம், சுக்கங்காய் வற்றல் பத்து, இதைத் தோல் போக்கி காம்பு, நுனி முதலியவற்றை அரிந்து விடவும்.
400 மில்லி ஜலத்தில் அரை எலுமிச்சம் பழ அளவு புளி, உப்பு 2 தேக்கரண்டி போட்டுக் கரைத்து, சிறிது மஞ்சள் தூள், சாம்பார்ப் பொடி இரண்டு தேக்கரண்டி போட்டுக் கரைத்து வைத்துக் கொள்ளவும். வெல்லம் சுண்டைக்காய் அளவு சேர்த்துக் கரைக்கவும்.
பிறகு ஒரு படி கொள்கிற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு அரைக்கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு கால் தேக்கரண்டி, கடலைப் பருப்பு அரைத் தேக்கரண்டி, வெந்தயம் பத்து, மிளகாய் வற்றல் இரண்டு போட்டுத் தாளிதம் செய்து, பருப்பு சிவந்ததும் கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று உருவிப் போட்டு, சுக்கங்காய் வற்றல் பத்து போட்டு வதக்கி, அரிந்து வைத்துள்ள தக்காளி, வெள்ளைப் பூண்டு, வெங்காயம் மூன்றையும் போட்டுச் சுருள வதக்கவும்.
வெங்காயமும் வெள்ளைப் பூண்டும் நன்றாக வதங்கியதும், கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தைக் கொட்டிக் கிளறிவிட்டு கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து பக்குவமானதும் அரிசிமாவு அரைத் தேக்கரண்டி கரைத்துக் கொட்டவும். பெருங்காயம் சிறிதளவு கரைத்து விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
400 மில்லி ஜலத்தில் அரை எலுமிச்சம் பழ அளவு புளி, உப்பு 2 தேக்கரண்டி போட்டுக் கரைத்து, சிறிது மஞ்சள் தூள், சாம்பார்ப் பொடி இரண்டு தேக்கரண்டி போட்டுக் கரைத்து வைத்துக் கொள்ளவும். வெல்லம் சுண்டைக்காய் அளவு சேர்த்துக் கரைக்கவும்.
பிறகு ஒரு படி கொள்கிற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு அரைக்கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு கால் தேக்கரண்டி, கடலைப் பருப்பு அரைத் தேக்கரண்டி, வெந்தயம் பத்து, மிளகாய் வற்றல் இரண்டு போட்டுத் தாளிதம் செய்து, பருப்பு சிவந்ததும் கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று உருவிப் போட்டு, சுக்கங்காய் வற்றல் பத்து போட்டு வதக்கி, அரிந்து வைத்துள்ள தக்காளி, வெள்ளைப் பூண்டு, வெங்காயம் மூன்றையும் போட்டுச் சுருள வதக்கவும்.
வெங்காயமும் வெள்ளைப் பூண்டும் நன்றாக வதங்கியதும், கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தைக் கொட்டிக் கிளறிவிட்டு கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து பக்குவமானதும் அரிசிமாவு அரைத் தேக்கரண்டி கரைத்துக் கொட்டவும். பெருங்காயம் சிறிதளவு கரைத்து விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
No comments:
Post a Comment