ஒரு தேக்கரண்டி துவரம் பருப்பு, அரைத் தேக்கரண்டி சீரகம், அரைத் தேக்கரண்டி கொத்தமல்லி விதை, நான்கு மிளகாய் ஆகியவற்றை வைத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.
சிறு எலுமிச்சம் பழ அளவு புளி, ஒரு தேக்கரண்டி உப்பு, அரைத்த பொடி ஆகியவற்றுடன் 200 மில்லி நீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும்.
இரண்டு முழுப் பூண்டுகளைத் தோல் உரித்து, நெய் அல்லது எண்ணெயில் சிவக்க வறுத்து ரசத்தில் கொட்ட வேண்டும்.
ரசம் நன்றாகக் கொதி வந்ததும் மேலும் 200 மில்லி நீர்விட்டுக் கடுகு, இரண்டு மிளகாய் தாளித்துக் கொட்டி இறக்கி விட வேண்டும்.
சிறு எலுமிச்சம் பழ அளவு புளி, ஒரு தேக்கரண்டி உப்பு, அரைத்த பொடி ஆகியவற்றுடன் 200 மில்லி நீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும்.
இரண்டு முழுப் பூண்டுகளைத் தோல் உரித்து, நெய் அல்லது எண்ணெயில் சிவக்க வறுத்து ரசத்தில் கொட்ட வேண்டும்.
ரசம் நன்றாகக் கொதி வந்ததும் மேலும் 200 மில்லி நீர்விட்டுக் கடுகு, இரண்டு மிளகாய் தாளித்துக் கொட்டி இறக்கி விட வேண்டும்.
No comments:
Post a Comment